நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் சமரசம் பேசினர். காவல்துறையினரின் அறிவுரையை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரசியல்
நீட் வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 07:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
