பெண்களை இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில், உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இபேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடினர். உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அவருக்கு எதிரான கண்டனப் பதாகைகளை ஏந்தியும், அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

