சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது....
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது....

The News Outlook
🕒 2 ஆக., 2026, 04:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது....

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணையில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.... விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம், தாயில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா நாடுகளிலிருந்து செங்கால் நாரை, கூலைக்கடா உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். தொடர்ந்து 36வது முறையாக இந்த ஆண்டும் வெளிநாட்டு பறவைகளின் வருகை தந்துள்ளது. இந்நிலையில் இந்த பறவைகள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகேயுள்ள வெம்பக்கோட்டை நீர்த்தேக்க அணைக்கு உணவு தேடி ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளது. வெளிநாட்டு பறவைகள் அணையில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கரையில் ஒதுங்கும் மீன்களுக்காக காத்திருக்கும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது. வெம்பக்கோட்டை பகுதியில் தொடர்ந்து வெளிநாட்டு பறவைகள் வலசை வருவதால் இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...