- பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தற்போதைய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'தாயுமானவர்' திட்டத்தை, ஊழியர்களின் பணிச் சுமை மற்றும் நலனைக் கருத்தில்கொண்டு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- கூட்டுறவு வங்கிகளில் நீண்டகாலமாகத் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் கணினிப் பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்களை காலதாமதமின்றிப் பணி வரன்முறை (பணி நிரந்தரம்) செய்ய வேண்டும்.
- கூட்டுறவு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளன்றே, அவர்களுக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நிதிப் பலன்கள் அனைத்தையும் எவ்விதத் தாமதமுமின்றி முழுமையாக வழங்க வேண்டும்.
- பணிக்கொடைச் சட்டத்தின்படி, கூட்டுறவு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்தி, அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
- தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்திற்கு அரசு உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
தங்களது நியாயமான வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாகக் கொள்கை அளவில் பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனப் பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் வலியுறுத்தினர்.

