விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும், பழைய ஓய்விய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் ,ஆசிரியர் தகுதித் தேர்வு- 1 தேர்வு-2 ஆகியவற்றிற்கு 40% தேர்ச்சி மதிப்பெண்களாகக் குறைத்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு level-10 call 45 லிருந்து 50 ஆக உயர்த்தி வழங்டை வேண்டும்,உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்க மறக்கும் அநீதியை கலைத்திட வேண்டும், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்திகள்
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்.
🕒 20 ஆக., 2026, 12:30 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
