விருதுநகர் அருகே செவல்பட்டி பகுதியில் 38 வயது பெண்மணி ஒருவர் தனது வீட்டின் வெளியே இருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியலறை சுவற்றின் மேல் பகுதியில் செல்போன் ஒன்று கேமரா வீடியோ ரிக்கார்டு செய்தபடி இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ந்து போன அப்பெண்மணி உடனடியாக செல்போனை எடுத்து பார்த்தபோது தான் குளித்ததை வீடியோ பதிவு செய்தது தெரிய வந்தது. குளியலறையிலிருந்து செல்போனுடன் வெளியே வந்த அந்த பெண்மணியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்த அதே பகுதியைச் சேர்ந்த மதன் 24, என்ற இளைஞர் மிரட்டியதுடன் வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பெண்மணி சூலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மதனை போலீசார் கைது செய்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விருதுநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
The News Outlook
🕒 21 ஜூலை, 2026, 10:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

