விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "போதையில்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருப்போம், போதையில்லா இளைஞர்கள் வளமான சமுதாயத்தின் அடித்தளம் என்ற கருத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தி இளைஞர்கள் மேம்பாட்டு குழு சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் வைணவிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாவாடித் தோப்பு திடலில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பாவாடித் தோப்பிலேயே முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து வாழ்வை அழிக்கும் போதை பழக்கத்தை கைவிட வலியுறுத்தியும், போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்களடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய படி நடைபயணமாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!!
The News Outlook
🕒 2 ஆக., 2026, 01:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
