விருதுநகரில் 'விருதை விழுதுகள்' மற்றும் 'மித்ரு' அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய கல்வித் திருவிழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 25 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இக்கல்வித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவ, மாணவிகள் என மொத்தம் 25 பேருக்கு, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இத்துடன், பயனடைந்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,000 மதிப்பிலான பள்ளிப் பைகள் (School Bags) மற்றும் அத்தியாவசியக் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேலும், இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மித்ரு அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு, சிறப்பான முறையில் உபசரிக்கப்பட்டனர்.

