தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பேசியதாக தஞ்சை காவல் நிலையத்தில் தவெகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்ட்டது.பின்னர் தஞ்சாவூர் காவல் துறையினர் உதயநிதி இல்லத்திற்கு வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கு தமிழக முழுவதும் திமுகவின் கண்டனம் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். .இதன்ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து வத்திராயிருப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது...
The News Outlook
🕒 4 ஆக., 2026, 07:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
