விருதுநகர் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் லாரி காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி அட்வான்ஸ் ஆக 30 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர செயலாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் முழுவதும் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் விநியோகம் செய்யும் உரிமம் பெற்று தருவதாக கூறி லாரி உரிமையாளர்களிடமிருந்து முன்பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காண்ட்ராக்ட் பெற்று தந்த பிறகு மீதம் ரூபாய் பெற்றுக் கொள்வதாக சொல்லியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லாரி உரிமையாளர் ரங்கராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தவெக நிர்வாகிகளான கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
டாஸ்மாக் லாரி ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ 30 லட்சம் பெற்று மோசடி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை த.வெ.க.நிர்வாகிகள் கைது.
The News Outlook
🕒 1 ஆக., 2026, 12:45 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
