பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1931 ஆம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950 முதல் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘வளையாபதி’, ‘புதிய பறவை’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லு முல்லு’, ‘ஹே ராம்’, ‘பிஸ்கோத்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
திரைத்துறைக்கான அவரது சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்திய அரசு 2022 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

