சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை: விருதுநகர் ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனு!
செய்திகள்

சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை: விருதுநகர் ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனு!

The News Outlook
🕒 5 ஆக., 2026, 07:32 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை: விருதுநகர் ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில்,சிவகாசிப் பகுதியில் ஆய்வு என்ற பெயரில் பட்டாசு ஆலை உரிமையாளர்களையும் வியாபாரிகளையும் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் அச்சுறுத்துவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் ஜே.கே. செல்வின் ஏசுதாஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இக்கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்:

சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் சமீபகாலமாக ஆய்வு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் கெடுபிடிகளால் தொழிலாளர்களும், வியாபாரிகளும் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் முறையான காரணங்களின்றி தற்காலிகத் தடை விதிப்பதால், ஆலைகள் நீண்டகாலம் திறக்கப்படாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆய்வின்போது ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உரிமையாளர்கள் திருத்திக் கொள்வதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். தவறு பெருமளவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் சிலர் பட்டாசு ஆலை உரிமையாளர்களை மிரட்டி, மரியாதையின்றி நடப்பதையும், பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதையும் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதேவேளையில், அரசு தடை செய்த பட்டாசுகளை யாரேனும் சட்டவிரோதமாக விற்பனை செய்தால், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்வதில் ஆட்சேபனை இல்லை.

எனினும், சாதாரண ஆய்வுகள் என்ற பெயரில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் பங்கேற்றோர்:

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் இந்நிகழ்வின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் லில்லி ராஜன், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளர் பைக் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியராஜன், வணிகர் அணி மாநிலத் துணைச் செயலாளர் செங்கோல் ராஜ், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் தாமஸ், ஒன்றியச் செயலாளர் முத்து முருகன் மற்றும் நிர்வாகிகள் திலீபன், செல்வராஜன், கணேசன், அந்தோணி ராஜ், சத்யராஜ், ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...