விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சுதர்சன் (வயது-12) . இவர் ராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப்பள்ளி 6 வகுப்பு படித்து வந்த நிலையில் காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அந்த ஆட்டோவில் 12 பேர் மாணவர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது கோபாலபுரம் to வ.புதுப்பட்டி சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுதர்சன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சுதர்சன் உடல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி என்ற லூர்து மற்றும் சோனா என்ற பள்ளி மாணவி இருவரும் பலத்த காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 01:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
