சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/வேலைவாய்ப்பு/அரசு துறைகளில் 3 லட்சம் காலியிடங்கள்; 821 பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பு – TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி
வேலைவாய்ப்பு

அரசு துறைகளில் 3 லட்சம் காலியிடங்கள்; 821 பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பு – TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி

🕒 14 ஆக., 2026, 06:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு துறைகளில் 3 லட்சம் காலியிடங்கள்; 821 பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பு – TNPSC தேர்வர்கள் அதிர்ச்சி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

டிஎன்பிஎஸ்சி குரூப்–2, 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு: குறைந்த காலியிடங்களால் தேர்வர்கள் ஏமாற்றம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குரூப்–2 மற்றும் குரூப்–2A பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், வெறும் 821 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது போட்டித் தேர்வர்களிடையே அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தம் நிரப்பப்பட உள்ள 821 இடங்களில், குரூப்–2 (நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகள்) பிரிவில் 41 பணியிடங்களும், குரூப்–2A (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) பிரிவில் 780 பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, சார் பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர் மற்றும் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் (ASO) உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இத்தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாகத் தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: "அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதால் நிர்வாக ரீதியான பணிச்சுமை அதிகரித்துள்ளது. காலியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் எனத் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிகக் குறைந்த அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது."

இப்பணிகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி, இத்தேர்வுக்கான முதற்கட்டத் தேர்வு 2026-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று நடைபெற உள்ளது எனத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔