சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் சற்று சரிவு ஏற்பட்டது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000 என்ற புதிய விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விலை மாற்றங்கள் ஏற்படுவதால், அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

