சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கல்லிடைக்குறிச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதையில்லா பாரதம் உறுதிமொழி
செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதையில்லா பாரதம் உறுதிமொழி

🕒 17 ஆக., 2026, 11:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
கல்லிடைக்குறிச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதையில்லா பாரதம் உறுதிமொழி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதையில்லா பாரதம் உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் மற்றும் மருத்துவப் பிரிவு – ராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் வலது கையை உயர்த்தி, அனைத்து விதமான போதைப் பழக்கங்கள் மற்றும் அடிமைத்தனங்களில் இருந்தும் விலகி இருப்பதாக உறுதிமொழி ஏற்றனர். மேலும், ஆரோக்கியமான, நற்பண்புகள் நிறைந்த மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதாகவும் உறுதி அளித்தனர். போதைப்பொருட்கள் மற்றும் போதைப் பழக்கங்களால் ஏற்படும் உடல்நலம், குடும்பம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாங்கள் மட்டுமின்றி, தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றியுள்ளவர்களிடமும் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து, போதையில்லா வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிப்போம் என்றும் மாணவ, மாணவிகள் உறுதியேற்றனர். மேலும், தங்களது நேரம், ஆற்றல், திறமைகள் மற்றும் வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, போதையில்லாத, ஆரோக்கியமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நேர்மறையான பங்களிப்பை வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனர். போதையில்லா இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக, ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 பேரையாவது போதையில்லா வாழ்க்கை முறையை ஏற்க ஊக்கப்படுத்த வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்து இணைய வழியாகவும் போதையில்லா உறுதிமொழியை ஏற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் கிளைகள் வழிகாட்டுதலின் கீழ், கல்லிடைக்குறிச்சி கிளை ராஜயோக தியான நிலையம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் திரண்டு போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டது, பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. “ஜெய் ஹிந்த்” முழக்கத்துடன் உறுதிமொழி நிகழ்ச்சி நிறைவடைந்தது. ராஜயோக தியானத்தின் மூலமாக இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று விளக்கம் கூறப்பட்டது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔