சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் கோலாகலமாக பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் தரிசனம்
ஆன்மீகம்

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் கோலாகலமாக பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் தரிசனம்

🕒 26 ஆக., 2026, 04:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் கோலாகலமாக பிரதோஷ விழா – திரளான பக்தர்கள் தரிசனம்

AI Highlights

  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீதிருமேனிநாதர் திருக்கோவிலில், ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

14 சிவத்தலங்களில் 10-வது திருத்தலமாகவும், மகான் ரமண மகரிஷி அவதரித்த புண்ணிய பூமியாகவும் விளங்கும் திருச்சுழியில் அமைந்துள்ள இக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச் சென்று அபிஷேகப் பொருட்களை வழங்கி நந்தி பெருமானை வழிபட்டால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வழிபடுவது நற்பலன்களை தரும் என்றும் ஐதீகம்.

11 வகையான பொருட்களால் நந்திக்கு அபிஷேகம்

திருச்சுழி ஸ்ரீதிருமேனிநாதர் கோவிலில் நடைபெற்ற சனிப்பிரதோஷ விழாவில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர், நெய், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூப ஆராதனை நடைபெற்றது.

ரிஷப வாகனத்தில் வீதி உலா

இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி மற்றும் அம்பாளை, பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔