சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் இன்று (ஆகஸ்ட் 25) சந்தித்தனர்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிடும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஜி. சுப்பிரமணியன், எஸ்.டி. கதிரேசன் உள்ளிட்டோர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தனர்.
அப்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அரசின் முடிவு மூலம் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

