சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அருப்புக்கோட்டை அருகே பெண் உயிரிழந்த விவகாரம்: 'கொலை வழக்குப்பதிவு செய்து RDO விசாரணை நடத்த வேண்டும்' — விருதுநகரில் உறவினர்கள் சாலை மறியல்!
செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே பெண் உயிரிழந்த விவகாரம்: 'கொலை வழக்குப்பதிவு செய்து RDO விசாரணை நடத்த வேண்டும்' — விருதுநகரில் உறவினர்கள் சாலை மறியல்!

The News Outlook
🕒 4 ஆக., 2026, 12:07 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அருப்புக்கோட்டை அருகே பெண் உயிரிழந்த விவகாரம்: 'கொலை வழக்குப்பதிவு செய்து RDO விசாரணை நடத்த வேண்டும்' — விருதுநகரில் உறவினர்கள் சாலை மறியல்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்த மகேஸ்வரி (38) என்ற பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவர் மற்றும் மைத்துனர் மீது வழக்குப் பதிவு செய்து RDO விசாரணை நடத்தக் கோரி, உறவினர்கள் விருதுநகரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தல்குடியைச் சேர்ந்த பாண்டி (44) என்பவருக்கும் மகேஸ்வரிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையில், நேற்று மகேஸ்வரி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள், "திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் இது தற்கொலை அல்ல; கணவர் பாண்டி மற்றும் அவரது சகோதரரான (மைத்துனர்) சீனிவாசன் (46) ஆகிய இருவரும் சேர்ந்து மகேஸ்வரியைக் கொலை செய்துள்ளனர்" எனக் குற்றம் சாட்டினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, விருதுநகர் அரசு மருத்துவமனை முன்புள்ள காரியாபட்டி சாலையில் உறவினர்கள் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உறவினர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், விருதுநகர் - காரியாபட்டி சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டுப் போக்குவரத்து சீரானது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...