விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அரசு பள்ளி மாணவ மாணவியருடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட ஆட்சியர்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் இந்து தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு நடத்தினார். காலை உணவு தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்ததுடன் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு மற்றும் வழக்கு முறை குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உணவின் தரத்தை தாமே அறிந்து கொள்ளும் வகையில் ஆட்சியர் சுகபுத்ரா மாணவ மாணவியருடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். ஆட்சியரின் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அரசு பள்ளி மாணவ மாணவியருடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட ஆட்சியர்!
The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 08:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
