தமிழகத்தில் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் சுங்கக் கட்டண திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகன வகைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது.
அந்த நேரத்தில் கட்டண உயர்வு செய்யப்படாத மீதமுள்ள 26 சுங்கச்சாவடிகளிலும் தற்போது ஆண்டுக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

