மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (செப்டம்பர் 1) சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளவும், காவிரிப் படுகை பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய், மலர்களைத் தூவி காவிரி நீருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் நெல் விதைகளையும் தூவி சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

