சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மணப்பாறை சிப்காட் அருகே பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு சாலை மறியல்
செய்திகள்

மணப்பாறை சிப்காட் அருகே பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு சாலை மறியல்

The News Outlook
🕒 3 ஜூலை, 2026, 02:35 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மணப்பாறை சிப்காட் அருகே  பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை வசதி கேட்டு சாலை மறியல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையப்பகுதியில் பாதை உள்ளது. இந்தப் பாதையை கடந்து தான் கே.பெரியப்பட்டி சொக்கம்பட்டி, உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். மேலும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்களும் இந்த வழியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பாதை அடைக்கப்பட்டது. இந்தப் பாதை அடைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் சுமார் கிலோ மீட்டர் வரை சென்று வர வேண்டியுள்ளது . இதனால் மேம்பாலம் அமைக்கும் வரை அந்தப் பாதையை திறந்து விட வேண்டும், மேம்பாலம் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து வருவதால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி சுமார் ஒரு ஒன்றரை கிலோ மீட்டருக்கு மேல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழமணி, மணப்பாறை வட்டாட்சியர் சுந்தர பாண்டியன் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பாதையை ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அனைவகுத்து நின்றது.உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததோடு அடைக்கப்பட்ட பாதையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் கடும் வேதனைக்கு ஆளாகினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...