வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் சேதம் அடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது மேலும் தம்பிபட்டியில் இருந்து,வத்திராயிருப்பு,இலந்தைகுளம் கோட்டையூர்,அழகாபுரி, மதுரை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடையதான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிழற்குடையானது பராமரிப்பின்றி மேற்கூரை சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் மது அருந்தும் கூடமாக மாறி வருகிறது . மேலும் கடந்த சில நாட்களாக இந்த நிழற்குடை சுற்றி கடைகள் அமைத்திருப்பதால் பயணிகள் யாரும் நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் உடனடியாக பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடைவை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் சேதம் அடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை ...
The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 07:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
