அரியலூர் மாவட்டத்தில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றி, மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரித்து தேசப்பற்றை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவற்றில் குறிப்பாக, 100 அடி உயரம் கொண்ட கனரக கிரேனில் தேசியக் கொடியை ஏற்றிய காட்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. காலை நேரத்தில் தேசியக் கொடியை முறையாக ஏற்றி, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் மரியாதையுடன் இறக்கி பாதுகாத்தது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும், தொழிற்சாலை வளாகங்கள் முழுவதும் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டு, சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றையும், தேசியக் கொடியின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்த முயற்சி, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் தேசப்பற்று உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

