விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி நெடுஞ்சாலையில் நகராட்சி குப்பை கிடங்கில் வெளியேறிய புகை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர்* சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது .இந்த குப்பை கிடங்கில் கழிவுகள் அவ்வப்போது எரியூட்டப்படுவதன் காரணமாக அந்தப் பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்டு வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயணிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உடனடியாக நகராட்சி அதிகாரிகளையும் அழைத்து உடனடியாக எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் வாகனங்கள் மூலம் தண்ணீர் பீச்சடித்து தீ கட்டுக்குள் கொண்டு கொண்டு வந்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்தப் பகுதியில் நிரந்தரமாக குப்பை கிடங்கால் ஏற்படும் புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி நெடுஞ்சாலையில் நகராட்சி குப்பை கிடங்கில் வெளியேறிய புகை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர்
The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 03:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
