விருதுநகரில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள், அருகில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக தமிழக அரசு அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து கட்சி மக்கள் போராட்ட குழு சார்பாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள்,பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவில்லை எனவும் உடனடியாக முதல்வர் அறிவித்தது போல் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மக்கள் நீதி மையம், விடுதலைச் த்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிமக்கள் போராட்ட குழு சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்திகள்
விருதுநகரில் அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பாக வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள், அருகில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக தமிழக அரசு அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
The News Outlook
🕒 20 ஜூலை, 2026, 01:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

