தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக இன்று காலை தஞ்சாவூர் போலீசார் அவரை கைது செய்தனர் இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசை கண்டித்து திமுகவினர் தமிழக முழுவதும் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலினின் கைது கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் திமுகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது அதனை ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திமுகவினர் அகற்றிய தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்த தமிழக அரசையும் முதல்வர் விஜய்யை கண்டித்தும் திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
செய்திகள்
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
The News Outlook
🕒 4 ஆக., 2026, 07:59 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
