மீன்வளத் துறையின் அரசின் பல்வேறு மானியத் திட்டங்களின் பயன்களை பெற, இனி மீனவர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வரத் தேவையில்லை. மத்திய அரசின் National Fisheries Digital Platform (NFDP) மூலம் பொதுச் சேவை மையங்கள் (CSC) வழியாக விண்ணப்பிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள், மீனவ மகளிர், மீன் விற்பனையாளர்கள் மற்றும் மீன்வளத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் அரசின் மானியத் திட்டங்களுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 0431-2421173, 93848 24370 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகள்
மீன்வளத் துறையின் புதிய டிஜிட்டல் சேவை: மானியத் திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
The News Outlook
🕒 3 ஜூலை, 2026, 02:40 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
