மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவேரி ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருச்சி அம்மா மண்டபம் காவேரி ஆற்றில் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் அங்கு தேங்கி உள்ள நீரில் மீன்கள் செத்து மிதக்கின்றன அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது ஏராளமான மீன்கள் அங்கு செத்து கிடைக்கிறது இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், செத்து மிதக்கும் மீன்களை அகற்றி படித்துறையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News
திருச்சி காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
The News Outlook
🕒 28 ஜூலை, 2026, 12:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

