விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை திருடிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த ஸ்டிக்கர் கடை உரிமையாளர் பிரபாகரன் வார விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான சுமார் 74 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தளவாய்புரம் போலீஸார் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கொம்மந்தாபுரத்தை சேர்ந்த சிவா (19) மற்றும் வீரமணி (21) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் நகைகள் மற்றும் ரொக்கத்தை முழுமையாக மீட்டனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை திருடிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 01:58 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

