சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/இருளில் தாளக்குடி ஊராட்சி 9 மணி நேரத் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி! 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அவலம்!...
செய்திகள்

இருளில் தாளக்குடி ஊராட்சி 9 மணி நேரத் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி! 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அவலம்!...

The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 03:28 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
இருளில் தாளக்குடி ஊராட்சி 9 மணி நேரத் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி! 40 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அவலம்!...

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

​ திருச்சி மாவட்டம், நெம்பர் ஒன் டோல்கேட் அருகேயுள்ள தாளக்குடி ஊராட்சியில் நள்ளிரவு முதல் காலை வரை நீடித்த 9 மணி நேரத் தொடர் மின்வெட்டு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாகப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.... ​விடிய விடிய நீடித்த மின்தடை ​தாளக்குடி ஊராட்சியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்குத் தடைப்பட்ட மின்சாரம், இன்று காலை 9 மணி வரை வழங்கப்படவில்லை. இது ஒரு நாள் பிரச்சனை மட்டுமல்லாமல், இப்பகுதியில் அடிக்கடி 3 மணி நேரம், 4 மணி நேரம் எனத் தொடர் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.... ​நேற்றிரவு 12 மணிக்குப் போன மின்சாரம் காலை 9 மணி வரை வராததால், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர்.... ​15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின ​தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த மின்தடை நீடித்தது... குறிப்பாக: ​திருவள்ளுவர் நகர் ​ஆனந்த் நகர் ​கிருஷ்ணா நகர் ​காந்தி நகர் ​முத்தமிழ் நகர் ​கீரமங்கலம் ​அகிலாண்டபுரம் ​ஆர்.கே.வி. நகர் ​உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரமின்றி பெரும் வேதனைக்கு ஆளாகினர்... ​ ​மின்சாரம் இல்லாததால் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்... மேலும், மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது... ​ "மின்சாரம் இருந்தால்தான் குடிநீர் வரும். தண்ணீர் இல்லாததால் காலையில் சமைப்பதற்குக் கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.".. ​இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிகளின் அலைபேசி எண்களுக்கும், அலுவலக எண்களுக்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்ற போது, அதிகாரிகள் யாரும் தொலைபேசியை எடுத்துப் பேசவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.... ​"40 ஆண்டுகள் பின்னோக்கி வாழ்கிறோம்" ​"நாடு என்னதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறினாலும், அடிப்படைத் தேவையான மின்சாரம் இல்லாமல் நாங்கள் 40 வருடங்களுக்குப் பின்னோக்கிச் சென்று வாழ்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது... எங்களுக்கு எப்போதுதான் இந்த அவல நிலையிலிருந்து விடிவுகாலம் பிறக்கும்?" என அப்பகுதி கிராமவாசிகள் மிகுந்த மனவேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.... ​சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தாளக்குடி ஊராட்சியில் நிலவும் மின்சாரப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது....

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...