திருச்சியில் 80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவின் சிறப்பாக, அமைதி மற்றும் ஒற்றுமையை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. மேலும், இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிறங்களை பிரதிபலிக்கும் பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டு விழாவிற்கு தேசபக்தி நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள், காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், தேசியக் கொடியின் மூவர்ண வண்ணங்களை பிரதிபலிக்கும் சேலையை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

