தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 24) அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனிடையே, இன்று முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

