செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் நாளை நடைபெற உள்ள தெற்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து அமித்ஷா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நாளை கோவளத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சருடனான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

