தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜெயமங்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக பணம் கேட்டு மிரட்டி வருவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கள ஆய்வு செய்வதாக கூறி மருதுதுரை என்பவர் 15 பேரை அழைத்து வந்து அவதூறு செய்தி வெளியிட்டு விடுவேன் என தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஜெயமங்கலம் ஊராட்சி செயலாளர் கோபால் புகார் தெரிவித்துள்ளார் இதனால் ஊராட்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளிலும் பத்திரிகையாளர் எனக் கூறி பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளதா தெரிவித்துள்ளனர்
செய்திகள்
எஸ்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் புகார் மனு
🕒 20 ஆக., 2026, 08:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

