விருதுநகர் மாவட்டம், குல்லூர் சந்தைப் பகுதியில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் இ. சந்திரன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், வரவிருக்கும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் மண்டலச் செயலாளர் ஜோசப், துணை மண்டலச் செயலாளர் ஆறுமுக சக்திவேல் ஆகியோருடன் மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

