இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) விருதுநகர் மாவட்டம் சார்பில், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23(2)-ல் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும்; ஆசிரியர்களின் பணிக்காலம் மற்றும் உயர்கல்வி ஆகியவற்றிற்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் CBSE விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஆசிரியர்கள் திரளாகப் கலந்துகொண்டனர்.
Politics
விருதுநகரில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
The News Outlook
🕒 24 ஜூலை, 2026, 01:41 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
