சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை
செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை

🕒 24 ஆக., 2026, 06:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள புல்வெளியில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென பரவியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்மாற்றி எண்ணெய் கேன்களிலும் தீப்பற்றியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் மின்மாற்றி எண்ணெய் கேன்களில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதனால் அங்கு இருந்த மின்மாற்றிகளுக்கு தீ பரவி, மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔