சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக முதல்வர் விஜய் ஆணவத்துடன் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து விருதுநகரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில் பேசப்பட்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

