நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச். வசந்தகுமார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், வர்த்தக காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆபிரகாம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன், டியூக் துரைராஜ், சொக்கலிங்கம், குமார் காமராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

