சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: விருதுநகரில் கருப்பு பலூன்களுடன் காங்கிரஸ் அமைதிப் பேரணி
அரசியல்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: விருதுநகரில் கருப்பு பலூன்களுடன் காங்கிரஸ் அமைதிப் பேரணி

The News Outlook
🕒 9 ஆக., 2026, 07:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: விருதுநகரில் கருப்பு பலூன்களுடன் காங்கிரஸ் அமைதிப் பேரணி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன்களுடன் அமைதிப் பேரணி நடைபெற்றது.

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் 80-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “REJECT DELIMITATION” என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு பலூன்களை கைகளில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

விருதுநகர் காமராஜர் சிலை முன்பிருந்து தொடங்கிய அமைதிப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் தேசபந்து மைதானத்தை சென்றடைந்த பேரணி அங்கு நிறைவடைந்தது.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட, நகர, வட்டார அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔