தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 250 புதிய பஸ்களின் சேவையை முதல்-அமைச்சர் விஜய் நேற்று சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். இதில் 120 சாதாரண பஸ்கள் அடங்கும். அதில் நெல்லை கோட்டத்திற்கு 10 புதிய டவுன் பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, புதிய பஸ்களின் சேவை தொடக்க நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான ஆர்எஸ் முருகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இயக்கப்பட்டு வந்த பழைய டவுன் பஸ்களுக்கு மாற்றாக இந்த புதிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நெல்லை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேம்பட்ட பேருந்து சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக நெல்லை கோட்ட மேலாண் இயக்குனர் செல்வம் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய பஸ்கள் பொதுமக்களின் பாதுகாப்பான, வசதியான மற்றும் சீரான பயணத்திற்கு பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல்
நெல்லை கோட்டத்திற்கு 10 புதிய டவுன் பஸ்கள் – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கம்
🕒 26 ஆக., 2026, 03:05 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

