சுதந்திரப் போராட்ட வீரரும் திருநெல்வேலி சீமைக்கு சொந்தக்காரருமானு சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்த நிலையில் அவரது 154வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரே செக்கிழுத்த செம்மலுக்கு மணிமண்டபம் உள்ள நிலையில் அவரது பிறந்த தினத்தை ஒட்டி அங்குள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் சிதம்பரனாரின் புகழை பரப்பும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர் தமிழக வெற்றி கழகம் சார்பில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் எஸ் முருகன் கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது சுதந்திரப் போராட்ட வீரர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழாவில் என குறிப்பிட்டார் அருகில் இருந்தவர்கள் இன்று 155 வது பிறந்தநாள் என திருத்தினர் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு மக்கள் சேவையை அவர் செய்ததாகவும் இலவச சட்ட பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்தார் கப்பல் வாங்கிதூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தததாக பேசிய அவர் தவறுதலாக அவரே அந்த கப்பலை ஓட்டியதாகவும் சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் அதோடு ஆயுள் சிறை தண்டனை பெற்றதால் அவரை செக்கிழுத்த செம்மல் என அழைப்பதாகவும் குறிப்பிட்டார் பல்வேறு தவறான தகவல்களுடன் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
செய்திகள்
வ.உ.சி. பிறந்தநாள் விழாவில் பரபரப்பு! வரலாற்றுத் தகவல்களை தவறாக பேசிய தவெக எம்.எல்.ஏ.
🕒 5 செப்., 2026, 06:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த தினம் திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசியல் கட்சி பிரமுகர்கள் வரலாற்றை தவறுதலான தகவல்களை பேசிய திருநெல்வேலி சட்ட பேரவை உறுப்பினர் ஆர் எஸ் முருகன்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
