விருதுநகர் தவெக எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக கடந்த 2016-ம் ஆண்டு விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் செல்வம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சுபாஷினி, எம்.எல்.ஏ. எஸ்.பி. செல்வம் உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

