நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பணிகளை மேற்கொண்டு வருவதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டங்களை எட்டியுள்ளது. சமீபத்தில் படத்தின் ஒரு பெரிய படப்பிடிப்பு அட்டவணை நிறைவடைந்ததாக படக்குழு தரப்பில் தகவல் வெளியானது.
இதனிடையே, படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ‘அரசன்’ திரைப்படம் தரமான சம்பவத்தை செய்யும் என்ற நம்பிக்கையை சிலம்பரசன் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் தரத்தை கருத்தில் கொண்டு வெளியீட்டு திட்டம் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
‘அரசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு உருவாகி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது படத்தின் தரத்திற்கு முன்னுரிமை அளித்து வெளியீட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சிலம்பரசன்–வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால், ‘அரசன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

