ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. துணிச்சல் மற்றும் மன உறுதி மிக்க கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதை படக்குழு வெளியிட்ட தகவல்கள் உணர்த்துகின்றன.
‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரவீந்திர புள்ளே இயக்கியுள்ளார். ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைசா’, பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. கோண்ட் பழங்குடியினரின் உலகத்தை பின்னணியாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

