பொள்ளாச்சி அடுத்த கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் விநாயகர் வேடம் அணிந்தும், விநாயகரின் உருவம் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறும் பள்ளிக்கு வருகை தந்தனர். தொடர்ந்து மாணவர்கள் பக்திப் பாடல்கள் மற்றும் பஜனைப் பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.
இதையடுத்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் மாணவர்களின் பக்திப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, பள்ளிச் செயலாளர் எஸ்.டி. ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் ஆர். பிரகாஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

