சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பெயிண்டர் கைது
செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பெயிண்டர் கைது

The News Outlook
🕒 13 ஆக., 2026, 07:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பெயிண்டர் கைது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி டவுன் பகுதியில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வரும் சையது பீர் முகமது (30) என்பவர், 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொந்தரவு அளித்ததுடன், அவரை தாக்கியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் சையது பீர் முகமது மீது போக்சோ உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் திருநெல்வேலி டவுன் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔