நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது வழக்கமான உற்சாகத்துடன் திருநெல்வேலி மாவட்டத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளது பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வார் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் இந்த நிலையில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையை மிடுக்குடன் நடத்தினர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவலர்களின் அணிவகுப்பு தொடர்ந்து தீயணைப்பு மீட்பு படையினரின் அணிவகுப்பு தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு என அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை நாளை நடத்தப்படும் என தெரிகிறது
செய்திகள்
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெற்றது!
The News Outlook
🕒 12 ஆக., 2026, 05:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
